இலங்கைசமீபத்திய செய்திகள்

அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்தவர்கள் மடக்கிப்பிடிப்பு

நாட்டைவிட்டு சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த 67 பேர் கல்முனை கடற்பிராந்தியத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திடமாக உள்ளூர் பலநாள் இழுவைப்படகு ஒன்று கல்முனை கடலில் சென்ற நிலையிலேயே கடற்படையினரால் இடைநடுவில் மறிக்கப்பட்டு சோதனை மேற்க்கொண்டபோதே சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தவர்கள் மாட்டிக்கொண்டனர்.

53 ஆண்கள், 6 பெண்கள், 8 குழந்தைகள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button