இலங்கைசெய்திகள்

நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் ஜனாதிபதி மீண்டும் திட்டவட்டமான அறிவிப்பு

நான் ஒரு போதும் பதவி விலகமாட்டேன் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அமைச்சர்களுடனான சந்திப்பில் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டைப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து என்னால் மட்டும் மீட்க முடியாது. அதனால் தான் திறமைமிக்க ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளேன்.

எனவே ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சரவை என்பன ஒன்றுபட்டு செயற்பட்டால் தான் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். அத்துடன் திறமையானவர்களை அமைச்சரவைக்குள் உள்வாங்கி வருகின்றேன்.

அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை முழுமைபெறும். அமைச்சரவை முழுமைப்பெற்றதும் நான் பதவி விலகுவேன் என சில ஊடகங்களில் பார்த்தேன். அது ஒருபோதும் நடக்காது. எந்த சந்தர்ப்பத்திலும் நான் பதவி விலகமாட்டேன்”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டபாய தெரிவித்ததாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button