இலங்கைசமீபத்திய செய்திகள்
தமிழ்நாட்டு மக்களின் 20000 உணவுப்பொதிகள் கிளிநொச்சிக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/Screenshot_20220524_111219.jpg?resize=708%2C371&ssl=1)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள உணவுப்பொதிகளில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20000 பொதிகள் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட உள்ளது.
அரசாங்கத்தினால் இத்தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பயனாளர்களை தெரிவு செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.