இலங்கைசெய்திகள்

படகு விபத்தில் இளைஞன் பலி

திருகோணமலை இறக்ககண்டிப் பகுதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. இறக்ககண்டி வாழையூற்றுப் பகுதியைச் சேர்ந்த துஷ்யந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மூன்று இளைஞர்கள் படகில் சென்றபோதே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button