![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/vikatan_2021-08_c4cd0a3d-7cbe-46c8-9de0-7f9730957947_af197006879482fb5a6648ad54b6bea067c0c1137233d15f2fadfc1b79a82e96.jpg?resize=598%2C336&ssl=1)
இளைஞர் ஒருவரின் நிர்வாணப்புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடப்போவதாக அச்சுறுத்தி கப்பம் பெற்ற உரும்பிராய் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்தம்பதி மற்றும் அவருடைய சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளம் தம்பதியினர் சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் போலி முகப்புத்தக கணக்கு ஊடக நட்பு வட்டத்தில் இணைந்து இளைஞருடன் உரையாடியுள்ளனர்.
இந்நிலையில், இளம் தம்பதியினர் இளைஞனை கோப்பாய்க்கு அழைத்து தமது வீட்டில் பூட்டி வைத்து, சித்திரவதை செய்து, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.
அதனை முகப்புத்தகத்தில் பதிவிடப்போவதாக இளைஞனை மிரட்டி 2 லட்சம் ரூபா பணத்தை முதல் தடவையாகப் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து இரண்டாவது தடவையாக இளைஞனிடம் குறித்த இளம் தம்பதி 5 லட்சம் பண்ததை கோரியுள்ளது. அச்சம் அடைந்த இளைஞன் கோப்பாய் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், விரைந்து செயற்பட்ட பொலிஸார் இளம் தம்பதி உட்பட நால்வரை கைதுசெய்துள்ளனர்.