![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/FQhQ8G3UcAEzT4j.jpg?resize=485%2C860&ssl=1)
காலியில் கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் முரண்பட்டமையால் அவ்விடத்தில் குழப்பநிலை தோற்றம் பெற்றது.
காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்க்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக காலியில் இன்று (17) இரண்டாவது நாளாக போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே, போராட்டத்தில் ஈடுபடுபட்ட மக்களால் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டைகையை பொலிஸார் அகற்ற முற்பட்டமையாலேயே பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.