இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடலுக்கு பலகாரங்களுடன் படையெடுக்கும் மக்கள்

கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக தன்னெழுச்சியாக காலிமுகத்திடலில் மக்கள் ஆறாவது நாளாக தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டத்தை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டில் இன்று தமிழ் – சிங்கள புத்தாண்டை மக்கள் அனுஷ்டித்து வருகின்ற நிலையில் காலி முகத்திடலில் போராட்டத்தில் உள்ள மக்கள் புதுவருடத்தையும் புறக்கணித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நீர்கொழும்பு, கொழும்பைச் சேர்ந்த மக்கள் பலகாரங்களுடன் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் புதுவருடத்தை பரிமாறிக்கொள்வதற்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button