![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/cad3e2a6-b85e382a-bf0df8b8-nissanka-_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
தான் நாட்டை விட்டு தப்பியோடவில்லை என்றும், கடமை நிமித்தமே வெளிநாடு சென்றுள்ளதாக அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி அறிவித்துள்ளார்.
நிஸ்ஸங்க சேனாதிபதி நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே, அவர் அதனை மறுத்துள்ளார்.
தான் தற்போது பணிநிமித்தம் சுவிர்சலாந்தில் இருப்பதாகவும், விரைவில் நாட்டுக்கு திரும்பஉள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.