![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/Jhoneson-Fernando.jpg?resize=650%2C366&ssl=1)
ஜனாதிபதி கோட்டபாயராஜ பக்ச ஒருபோதும் பதவி விலகமாட்டார் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று (07) மீண்டும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” ஜே.வி.பி. வன்முறையை தூண்டுகின்றது. அக்கட்சியினருக்கு வரிசையை காண்பதுதான் மகிழ்ச்சி. 1971 மற்றும் 1988 காலப்பகுதியிலும் அவ்வாறுதான் செயற்பட்டனர். பல்லாயிரக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளிக்க வேண்டாம்.
நாம் ஜனநாயகத்தை மதிக்கின்றோம். அரசமைப்புக்கு அப்பால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தோற்கடிக்கப்படும்.” – என்றார்.