![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/IMG_20220324_090045-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)
கிளிநொச்சி பிரதான வீதியில் பாரிய விபத்து ஒன்று இன்று (24) காலை பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
சட்டத்தரணி பயணித்த கார் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய கார் பலத்த சேதமடைந்துள்ளது.
எனினும் காரில் பயணித்த சிரேஸ்ட சட்டத்தரணி சிவபாலசுப்ரமணியம் தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளார்.