இலங்கைசெய்திகள்

பளையில் சிறுவனைக் கடத்த முயற்சி

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில்  தாயுடன் சென்ற சிறுவன் ஒருவரை வானில் வந்தவர்கள் கடத்தி செல்வதற்கு முளற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று (09)மாலை இடம்பெற்றுள்ளது. கரந்தாய் ஏ9 வீதியூடாக தாயும், மகனும் நடந்து சென்று கொண்டிருந்த வேளையிலேயே  வெள்ளை நிற வானில் வந்தவர்கள்  சிறுவனைக் கடத்த முயன்ற போது தாயினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மக்களும் அப்பகுதியில் ஒன்று கூடியதால்  கடத்துவதற்கு முயற்சித்தவர்கள்  தப்பி சென்றுவிட்டனர் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக பளை பொலிசாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button