![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/22-6228733aea758-md.webp?resize=360%2C240&ssl=1)
ஊடக சுதந்திரத்துக்குத் துளியளவும் அச்சுறுத்தல் ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் செயான் சேமசிங்க தெரிவித்தார்.
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் ஊடாக, ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.