இலங்கை

ஜயசுந்தரவின் இராஜிநாமாவை ஏற்க மறுத்த ஜனாதிபதி!

ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் இராஜிநாமாக் கடிதத்தை ஏற்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச மறுத்துவிட்டார் என்று அறியமுடிகின்றது.

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகவேண்டும் என ஆளுங்கட்சியில் உள்ளவர்களே வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்களுக்கு இவரே காரணம் எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்நிலையில், சிங்கப்பூர் சென்று நாடு திரும்பிய ஜனாதிபதியிடம் பி.பீ. ஜயசுந்தர இராஜிநாமாக் கடிதத்தைக் கையளித்துள்ளபோதிலும், அதனை ஏற்க ஜனாதிபதி மறுத்துவிட்டார் என்று அறியமுடிகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button