தெற்கு தாய்வானிலுள்ள காஹ்சியுங் துறைமுக நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
![](https://i0.wp.com/cdn.virakesari.lk/uploads/medium/file/164731/1877193.jpg?resize=708%2C397&ssl=1)
குறித்த குடியிருப்புத் தொகுதியானது 13 மாடிகளை கொண்டது.
அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற தீபத்தில் 13 மாடி கட்டிடத்தில் பல குடியிருப்புகள் எரிந்து நாசமாகியுள்ளன.
![](https://i0.wp.com/cdn.virakesari.lk/uploads/medium/file/164732/skynews-taiwan-fire_5545864.jpg?w=708&ssl=1)
தீ விபத்து குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
55 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 14 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து குறைந்தது 11 சடலங்கள் பிணவறைக்கு நேராக கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்பு துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
![](https://i0.wp.com/cdn.virakesari.lk/uploads/medium/file/164733/skynews-taiwan-fire_5545863.jpg?w=708&ssl=1)
அதிகாலை 3 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டதாக தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.