இலங்கைசமீபத்திய செய்திகள்
பதைபதைக்கும் விபத்து சம்பவ இடத்திலேயே இருவர் பலி
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/IMG-d6769c2dec85de729ef929a6f8a74083-V.jpg?resize=641%2C855&ssl=1)
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
அரியாலை நெடுங்குளம் வீதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தென்னிலங்கையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்றிரவு 7.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை பயணித்த கடுகதி தொடருந்துடனே கார் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/FB_IMG_1654784106769.jpg?resize=708%2C943&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/FB_IMG_1654784110777.jpg?resize=708%2C532&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/FB_IMG_1654784104604.jpg?resize=708%2C532&ssl=1)