இலங்கைசெய்திகள்

வவுனியா பல்கலைக்கு அருகில் தீப்பரவல்

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் இன்று (09) தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினரால் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் தீ காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் வவுனியா பல்கலைக்கழகத்தினுள் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button