![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62a1cd10945e7.jpeg?resize=600%2C400&ssl=1)
வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் இன்று (09) தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினரால் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் தீ காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் வவுனியா பல்கலைக்கழகத்தினுள் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62a1cd1064d3e.jpeg?resize=600%2C400&ssl=1)