இலங்கைசமீபத்திய செய்திகள்

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் சேலை அணிந்து வந்த மஹிந்த

கொழும்பு கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பலின் பிரதான சூத்திரதாரிகளை கைது செய்யுமாறும் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் கோசங்கள் எழுப்பினர்.

சேலை அணிந்த ஒருவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜ பக்சவின் முகமூடி அணிந்திது போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். மற்றும் ஜனாதிபதி கோட்டபாய, பிரதமர் ரணில் ஆகியோரின் உருவப்பொம்மைகளும் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.

Related Articles

Leave a Reply

Back to top button