![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/IMG_20220605_170353.jpg?resize=385%2C331&ssl=1)
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.மாநகரசபைக்கு அண்மையில் நேற்று (04) இடம்பெற்ற விபத்தில் 70 வயதுடைய ஓங்காரரூபி என்னும் பெண் துறவியே உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளில் பயணித்த குறித்த பெண் மாநகரசபைக்கு அருகில் உள்ள குறுக்கு வீதிக்கு வேகமாக மோட்டார் சைக்கிளை திருப்பிய போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விபத்துசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.