இலங்கைசெய்திகள்

கண்ணீரில் மிதக்கின்றது முள்ளிவாய்க்கால் முற்றம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

பிரதான ஈகைச்சுடர் ஏற்றலுடன் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச்சுடரேற்றி, மலர்தூபி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி யுத்ததித்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில், பிள்ளைகளை பறிகொடுத்த தாய், கணவனை பறிகொடுத்த மனைவி, குடும்பத்தை பறிகொடுத்து அநாதையாய் நிற்கும் பிள்ளை இப்படியான எத்தனையோ உறவுகள் இன்று முள்ளிவாய்க்கால் மண்ணிலே வீழ்ந்து புரண்டு ஒப்பாரி வைத்து அழுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எங்கும், கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகின்றது.

முள்ளிவாய்க்கால் மண்ணிலே எமது கமராவில் பதிவான சில காட்சிகளைப் பகிர்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button