இலங்கைசமீபத்திய செய்திகள்
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG_20220518_090331-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)
முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான, ஆத்ம சாந்தி பூசையும், நெய்தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வும், இன்று (18) புதன்கிழமை வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர். செ.சந்திரகுமார், அந்தணர் ஒன்றிய நிர்வாகத்தினர், ஆலய பரிபாலனசபையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG_20220518_085628-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG_20220518_085256_2-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)