இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் மீட்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு இருநாட்கள் விடுமுறை என்பதால், அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கிலேயே பெருந்தொகையான மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் ஆறு இலட்சம் பெறுமதி உடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button