இலங்கைசெய்திகள்

பொலிஸாருக்கு சுடுவதற்கு அனுமதி விசேட உத்தரவு

தேவை ஏற்படும் போது துப்பாக்கிச்சூட்டை மேற்க்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் மேற்குறித்த விடயத்தினை அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

கலவரக்காரர்களால் உயிரிழப்பு மற்றும் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் வாகனநிறுத்தும் சோதனைகளைத் தடுக்க அதிகபட்ச நடவடிக்கையை எடுக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அரச அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம், கொள்ளை அல்லது உயிர் இழப்பு அல்லது பாரிய காயங்களைத் தடுப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button