இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கி உயிர் மாய்ப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ள சம்பவம் இன்று (23) இடம்பெற்றுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக இரண்டாம் வருட தனுஜா என்ற மாணவியே உயிரை மாய்த்துள்ளார்.

வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் செல்வதாகக் கூறி யாழ்ப்பாணம் வந்த மாணவி விடுதியில் உள்ள தனது அறையை உட்பக்கமாகப் பூட்டிவிட்டு காற்றாடியில் துணியைக் கட்டித் தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button