இலங்கை

கோட்டா வீடு போகும் வரை நாங்கள் வீட்டுக்கு போகப்போவதில்லை – காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் ஆவேசம்

கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (09) காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (10) தொடர்ந்து வருகின்றது.

ஏராளமான மக்களின் பங்கு பற்றுதலுடன் மழைக்கு மத்தியிலும் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கோட்டா வீட்டுக்கு போகும்வரை நாம் வீட்டுக்கு போகப்பவதில்லை எனத்தெரிவித்தே போரோட்டகாரர்கள் போராட்டர்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு மற்றும் குடிபாணங்களை வழங்கி வருகின்றமையையும் அவதானிக்ககூடியதாக உள்ளது.

அத்துடன், இப்போராட்டம் இன்று இரவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button