இலங்கைசமீபத்திய செய்திகள்

ஒருவார காய்ச்சல் – 8 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

ஒருவாரம் காய்ச்சலுக்கு உள்ளான 8மாத ஆண்குழந்தை ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த குழந்தை ஏழுநாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில்,  கடந்த  14 ம் திகதி யாழ் போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 மரணவிசாரணைகளை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர்மரணவிசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதோடு பிரேதபரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button