இலங்கைவிளையாட்டு

வடமாகாண கரப்பந்தாட்ட போட்டிகளில் யாழ்.மாவட்ட பாடசாலைகள் ஆதிக்கம்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்களுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் கடந்த 3, 4, 5 ஆம் திகதிகளில் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இவ் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகள் கடந்த 5 ஆம் திகதி (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இப் போட்டிகளில், ஆண்களுக்கான 16 வயது பிரிவில் புத்தூர் சோமஸ்கந்தா முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. மன்னார் மடுக்கரை அ.த.க.பாடசாலை, மன்னார் சென்.ஜோசப் பாடசாலைகள் முறையே 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.

ஆண்களுக்கான 18 வயதுப் பிரிவுப் போட்டிகளில் ஆவரங்கால் மகாஜனா கல்லூரி சம்பியனானது. வவுனியா மடுகந்த தேசிய பாடசாலை இரண்டாம் இடத்தையும், மன்னார் ஜின்னா பாடசாலை மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

ஆண்களுக்கான 20 வயதுப் பிரிவு போட்டியில், புத்தூர் சோமஸ்கந்தா சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது. வவுனியா மடுகந்த தேசிய பாடசாலை, மன்னார் பாத்திமா பாடசாலை ஆகிய முறையே 2ஆம், 3 ஆம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.

Related Articles

Leave a Reply

Back to top button