இலங்கைசெய்திகள்

அபாய வலயமாக யாழ் மாவட்டம் மக்களுக்கு கடும் எச்சரிக்கை

தீவிரமான டெங்கு காய்ச்சல் அபாய வலய பட்டியலில் யாழ்.மாவட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகிறது.

எனவே பொதுமக்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் பொதுமக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button