இலங்கைசெய்திகள்

என்னை மிரட்ட எவராலும் முடியாது – ஜனாதிபதி அதிரடி

“அவசரகாலச்சட்டத்தை நீக்குமாறு எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவும் – என்னை மிரட்டவும் முடியாது. எனக்குள்ள அதிகாரங்களைப் பயன் படுத்தியே அவசரகாலச்சட்டத்தை அமுல்படுத்தியுள்ளேன்” இவ்வாறு ஜனாதிபதி கோட்டபாயராஜ பக்ச ஆவேசத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (07) இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதியால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு அவசர காலச்சட்டத்தை அமுல்படுத்தவில்லை. போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறையை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் பாயும்.

எனக்கு எதிராக எவரும் போராட்டங்களை மேற்க்கொள்ளலாம், கருத்துக்களைத் தெரிவிக்கலாம். ஆனால், 5 வருட மக்களின் ஆணைக்கமைய ஜனாதிபதியாக தொடர்ந்து நீடிப்பேன் – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button