இலங்கைசெய்திகள்

யாழில் சோகம் 3 வயது பாலகன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – ஊரெழு மேற்கு பகுதியில் வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையான கிருஷ்ணகாந்தன் சித்தாத் (வயது-3) என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று மதியம் இரட்டையர்களான இரு குழந்தைகளும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தாயார் தேநீர் தயாரிக்கச் சமையலறைக்குச் சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது குழந்தை ஒருவரைக் காணவில்லை. குழந்தையை தேடியவேளையில், மாலை 4.00 மணியளவிலேயே வீட்டு கிணற்றைப் பார்த்த போது குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

குழந்தையை உடனடியாக மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிணற்றைச் சுற்றி தகரத்தினால் வேலியிடப்பட்டுள்ளது. அதில் ஏறிய போதே குழந்தை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை மேற்கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button