இலங்கைசமீபத்திய செய்திகள்

அரிசிக்கு கட்டுப்பாடு விலை விதித்தது நுகர்வோர் அதிகாரசபை மீறுவோருக்கு சிறைத்தண்டனை

நுகர்வோர் அதிகார சபையினால் அரிசிக்கான கட்டுப்பாடு விலை நிர்ணயிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடப்பட்டுள்ளது.

அதன் படி ஒரு கிலோ நாட்டு அரிசி 220 ரூபா, ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபா, ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்விலைகளை விட அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி அதிகமாக அரிசி விற்பனை செய்வோருக்கு 5 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வரை தண்டப்பணமும் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button