இலங்கைசெய்திகள்

வட்டுக்கோட்டையில் இருபெண்கள் சடலங்களாக மீட்பு

வட்டுக்கோட்டைப்பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரு வயோதிப பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை மாவடி சங்கரத்தைப் பகுதியில் இருந்து 76 மற்றும் 73 வயதுடைய வயோதிப்பெண்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு பெண் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும், மற்றையவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரும் தனிமையில் வசித்து வந்த நிலையிலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button