இலங்கைசெய்திகள்

யாழில் எரிவாயு சிலிண்டருக்காக வீதியில் இறங்கிய மக்கள்

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திப்பகுதியில் மக்கள் எரிவாயு வழங்குமாறு கோரி பலாலி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிலமணிநேரம் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

பரேமஸ்வராசந்திப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு நேற்றிரவு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டதாக அறிந்த மக்கள் இன்று (24) காலை வரிசையில் நின்றுள்ளனர்.

வர்த்தக நிலைய உரிமையாளரிடம் எரிவாயு சிலிண்டர் வழங்குமாறு கேட்டபோது, உரிமையாளர் இல்லை என்று தெரிவித்த நிலையிலேயே, மக்களுக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இந்நிலையிலேயே மக்கள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து கோப்பாய் பொலிஸாரின் தலையீட்டினால் நிலமை சுமுகமடைந்தது.

கோப்பாய் பொலிஸார் மக்களை அழைத்து வர்த்தக நிலையத்திற்குள் சென்று எரிவாயு சிலிண்டர் உள்ளதா என்று பரிசோதித்த பின்னரே நிலைமை சுமுகமடைந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button