இலங்கைசமீபத்திய செய்திகள்

வைத்தியர்சங்கம் பணிபகிஷ்கரிப்பு

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் மேற்க்கொண்டிருந்த மக்கள் மீது மஹிந்தராஜ பக்சவின் ஆதரவாளர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தால் நாட்டில் ஏற்பட்ட வன்முறையைக் கண்டித்து இலங்கை வைத்தியர் சங்கத்தால் நாடுபூராகவும் பணிபகிஷ்கரிப்பு இன்று (10) மேற்க்கொள்ளப்படுகின்றது.

வைத்தியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.ஞானசேகரன் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள போது இவ்வாறு தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டமை ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்ட வன்முறையாகப் பார்க்கிறோம்.

தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை மேற்கொள்ள மாட்டோம். இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு மனம் வருந்துவதோடு ஜனநாயகத்தையும் தேசபக்தியையும் விரும்பும் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button