இலங்கைசெய்திகள்

கைதடி குமரநகர் மாதர்சங்க மகளீர்தின விழா

கைதடி மத்தி குமரநகர் மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த மகளீர்தின விழா நாளை (30.04.2022) குமரநகர் விளையாட்டு மைதானத்தில் பி.ப 1.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

குமரநகர் மாதர் அபிவிருத்திச் சங்கத் தலைவர் சிவநாதன் கவிதா தலைமையில் இடம்பெறும் நிகழ்வில், முதன்மை விருந்தினராக அமரர் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் பாரியாரும்,
ஓய்வு நிலை ஆசிரியரும், சமூக சேவையாளருமான சசிகலா ரவிராஜ் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

இந்நிகழ்விற்கு, சிறப்பு விருந்தினர்களாக கைதடி சேதுகாவலர் வித்தியாலய அதிபர் சியாமளா கணறாஜன், கைதடி மத்தி கிராம சேவையாளர் நல்லதம்பி தனபாலசிங்கம், கைதடி மத்தி முன்னாள் கிராம சேவையாளர் சிவகுமார சர்மா, மாதர் சங்க ஒன்றியத் தலைவர் சுபத்திராதேவி தனபாலசிங்கம், கைதடி மத்தி சமுர்த்தி உத்தியோகத்தர் அன்ரன் தேவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

கெளரவ விருந்தினர்களாக, குமரநகர் சனசமூக நிலையத் தலைவர் சின்னத்தம்பி சிவபாதம், கைதடி மத்தி விவசாய சம்மேளனத் தலைவர் கதிர்காமன் சிவபாதம், குமரநகர் விளையாட்டுக்குழுத் தலைவர் கதிரவேலு பஜீவன், இத்தாலி நாட்டு புலம்பெயர் உறவு நடேசு ஜெயாநந்தன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

மாதர்களின் கண்ணைக்கவரும் பராம்பரிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button