இலங்கைசெய்திகள்

ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் இன்று (26) புகையிரதம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புகையிரதக் கடவையைக் கடந்து வீதியால் பயணிக்க முற்பட்டவேளையே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந்தார். அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம்மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button