இலங்கைசெய்திகள்

மகா சிவாரத்திரி நிகழ்வு

மகாசிவாரத்திரியை முன்னிட்டு ஊரெழு மேற்கு ஞான வைரவர் ஆலயத்தினரால் நடத்தப்படும் மகா சிவாரத்திரி நிகழ்வுகள் எதிர்வரும் 01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.

ஆலய நிர்வாக சபைத்தலைவர் சி.முகுந்தன் தலைமையில் நடைபெறும் இவ்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வலி.தெற்கு பிரதேசசபைத் தவிசாளர் கெளரவ க.தரச்ன் , உரும்பிராய் வாணி கல்வி நிறுவன இயக்குநர் கோ.சபேசன், பருத்தித்துறை சிங்கர் காட்சியறை முகாமையாளர் க.சிவகரன், வலி.கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபன், முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிசோர் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

மேலும், இந்நிகழ்வில் கெளரவ விருந்தினர்களாக றோயல் விளையாட்டுக் கழகத் தலைவரும், ஊரெழு கிராமத்தின் சமூக முன்னோடியுமான வை.தர்மகுலநாதன், ஊரெழு கதிர்காமக் கந்தன் ஆலய நிர்வாக சபைத் தலைவர் ஞா.பாஸ்கரன், ஊரெழு பாரதி சனசமூக நிலையத் தலைவர் சி.வினோத், பாரதி சனசமூக நிலைய உபதலைவர் சி.இராசரத்தினம், உரும்பிராய் நாகபூஷணி அம்மன் ஆலய நிர்வாக சபைத்தலைவர் ப.பரதன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

அத்துடன், பரிசளிப்பு வைபவம், மாணவர்களின் கலைநிகழ்வுகள், சிறப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெற உள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button