இலங்கைசமீபத்திய செய்திகள்
சட்டவிரோதமான முறையில் நாட்டில் இருந்து தப்பிக்க முயற்சித்தவர்கள் கைது
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-628c61b9c2ad9.jpeg?resize=600%2C400&ssl=1)
நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வேறு நாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சித்த 67 இலங்கையர்கள் நேற்று இரவு (23) பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை சாம்பல் தீவு சல்லி பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.