இலங்கைசமீபத்திய செய்திகள்

ஜப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குகிறது

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவி செய்வதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் உதவியானது, குழந்தைகள், மாணவர்கள், மற்றும் உதவி தேவைப்படும் நலிவுற்ற குடும்பங்களுக்கு பயன்படுத்தப்படுமென ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.

அதன்படி கிராமம் மற்றும் நகர்புறத்தைச் சேர்ந்த 15000 மாணவர்களுக்கும், 38000 பாடசாலை மாணவர்களுக்கும், மூன்று மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, தேங்காயெண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் இலங்கைக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button