இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்றும் முன்னெடுப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுதினத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்னும் தொனிப்பொருளில் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் தீலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இன்றும் இடம்பெற்றது.

முள்ளியவளை பகுதியிலும் ஊர் மக்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு கிளிநொச்சி வட்டக்கச்சி பொதுச்சந்தைக்கு முன்னால் செயற்பட்டுத்தப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்துகொண்டிருந்தார்.

கிளிநொச்சி நகர் பகுதியில் முச்சக்கர வண்டி சங்கத்தினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு செயற்படுத்தப்பட்டது.

திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button