இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் ஆட்சி சிலநாட்களே – ராஜித தெரிவிப்பு

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி இன்னும் சொற்ப நாட்களே இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடியுள்ளார். இதில் வெறும் 88 பாராளுமன்ற
உறுப்பினர்களே கலந்துகொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 157 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், 70 சதவீதமானவர்கள் கூட
மஹிந்தவுக்கு ஆதரவளிக்கவில்லை.

எனவே, விரைவில் நாம் ஆட்சி அமைப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button