இலங்கைவிளையாட்டு

வடக்கின் போரில் சென்ஜோன்ஸ் பலமான நிலையில்

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்தியகல்லூரி மற்றும் யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் மூன்றாவது நாளும், இறுதி நாளுமான இன்றைய தினம் போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றன.

அதன்படி, நேற்றைய ஆட்டத்தின் தொடர்ச்சியாக யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடியது. ஆரம்பம் முதல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சென்ஜோன்ஸ் அணி மேலதிகமாக 267 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் டிக்கிளே செய்து மத்தியகல்லூரியை துடுப்பெடுத்தாட பணித்தது.

இதனடிப்படையில் யாழ்.மத்தியகல்லூரி துடுப்பெடுத்தாடி வருகின்றது. அவ்வகையில் 4 நான்கு ஓட்டங்களுக்கு இரண்டு இலக்குகளை இழந்திருந்த நிலையில் தொடர்ச்சியாக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button