![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/colbasil-2_ci190808792_4555515_19072016_kll_cmy.jpg?resize=650%2C468&ssl=1)
“இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.”என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (23) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டிய விடயம் தொடர்பில் பதில் அளிக்கையிலேயே நிதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அப்படியானால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியை அழைத்து விசாரிப்போம் என ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.
“இல்லை, வரைவு நகல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை வழங்க முடியாது. முழுமையான அறிக்கையையே வெளியிட முடியும்” என்று பஸில் பதில் அளித்தார்.