இலங்கைசெய்திகள்

யாழில் அதிகளவான போதைப்பொருளை உட்கொண்டமையினால் இளைஞன் மரணம்

அதிகளவான போதைப்பொருளை உட்கொண்ட இளைஞன் ஒருவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

கொழும்புத்துறைப் பகுதியில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளை உட்கொண்ட 28 வயதுடைய இளைஞனே நேற்று (19) வீட்டில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் அதிகளவான போதைப்பொருள் உட்கொண்டமையே மரணத்திற்கு காரணமென சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button