![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/Basil_rajapakse_1.png-1-1024x682.jpg?resize=228%2C151&ssl=1)
மேலும் ஒரு நீதிமன்ற வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது 5 மில்லியன் நாட்காட்டிகளை 200 மில்லியன் ரூபா பொதுநிதியில் இருந்து அச்சிட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பசில் ராஜ பக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொழும்பு மேல் நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.