இலங்கைசெய்திகள்

கோட்டபாயவிற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிலும் இலங்கையர்களால் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கோட்டபாயவின் மகனின் வீட்டுக்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோட்டபாய 13 ஆம் திகதி பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் கோட்டபாயவின் உறவினர்கள் அமெரிக்காவில் வீடு வாங்குவதற்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்றும் விசாரணை மேற்க்கொள்ள வேண்டுமெனவும் போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button