இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் கொடுரம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் 41 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அளம்பில் பகுதியில் உள்ள தந்தையின் வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே நேற்று இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு வீட்டுக்கு வந்த இருவர் அவரை அழைத்துள்ளனர். இந்நிலையில் வெளியில் சென்ற அவரை இருவர் தாக்கியுள்ளனர். அவர் கீழே வீழ்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button