இலங்கைசெய்திகள்

வரணியில் விபத்து சம்பவ இடத்தில் பறிபோன உயிர்

வரணிப் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை -கொடிகாமம் வீதியில் பயணித்த இளைஞன் வரணி வடக்குப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதி ஓரத்தில் காணப்பட்ட கம்பத்துடன் மோதியே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில், துன்னாலை கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய அ.புவனேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button