இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளரை கொலைசெய்யவா? வீடியோ எடுக்கின்றீர்கள் என பொலிஸாரை விளாசிய சாணக்கியன்

மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா போகின்றீர்களா? என சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மிகவும் காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(29) மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கீகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சிவில் உடையில் வருகை தந்திருந்த பொலிஸார் கமெராவில் வீடியோ பதிவு செய்தனர்.
 
இந்தநிலையில், இதனை அவதானித்த இரா.சாணக்கியன் மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தாங்கள் பொலிஸ் ஊடகம் என பதிலளித்துவிட்டு அவர்கள்
நகர்ந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button