இலங்கைசெய்திகள்

புதிய பிரதமருடன் இடைக்கால அரசு அமைக்க ஜனாதிபதி பச்சைக்கொடி

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டபாய கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் இடைக்கால அரசு அமைக்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் முதற்கட்டமாக கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 29ஆம் திகதி அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button