இலங்கைசெய்திகள்

கைதடியில் விபத்து – வீட்டுக்கு முன்பே ஒருவர் பலி – வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எமனாக மாறியது

யாழ்ப்பாணம் கைதடிப்பாலத்திற்கு அருகில் நேற்று (10) இரவு விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று (11) காலை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மட்டுவில் தெற்கைச்சேர்ந்தவரும், கைதடிப்பாலத்தடி கைதடிநுணாவிலை வசிப்பிடமாகக் கொண்ட 52 வயதுடைய சுப்பன் சுதாகர் (சின்னக்கிளி) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,
நேற்றிரவு கைதடிப்பாலத்தடியில் உள்ள தனது வீட்டில் இருந்து யாழ் – கண்டி பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button